வெடித்து சிதறிய உடல்களின் DNA சோதனைக்காக வைத்தியசாலையில் காத்திருக்கும் உறவுகள்
இந்தியா - அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக அவர்களின் உறவினர்கள் அகமதாபாத் வைத்தியசாலையில் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த பலரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை அடையாளம் காண உதவும் வகையில் டிஎன்ஏ (DNA) பரிசோதனைகளுக்காக காத்து கொண்டுள்ளனர்.
DNA சோதனை
விபத்து நடந்த இடத்திலிருந்து அனைத்து உடல்களும் அவற்றின் எச்சங்களும் அகற்றப்பட்டுவிட்டதாக இந்திய பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் எச்சங்களை கண்டெடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும் அவற்றை சரியாக அகற்ற பல மணிநேரம் எடுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து மிக தீவிரமாக இருந்ததால், பல உடல்கள் சிதறிய நிலையில், உடல்களை காணும் செயல்முறை நிறைவுக்கு வர நீண்ட நேரம் ஆகலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri