விபத்து குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்
அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்கு நேற்று (12) இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பில் ஏர் இந்தியா உறுதிப்படுத்தப்பட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன் 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்துக் கொள்கிறோம்.
உறுதிபடுத்தப்பட்ட தகவல்
உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய பிரஜைகள், 7 போர்த்துகேய பிரஜைகள் மற்றும் 1 கனேடிய பிரஜைகள் அடங்குவர்.
உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஆவார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பாதிக்கப்பட்ட அனைவரின் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகளில் மட்டுமே நாங்கள் தற்போது முழுமையாக கவனம் செலுத்துகின்றன.
தொடர்பு கொள்ள..
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா தனது முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.
மேலும் தகவல்களை வழங்க ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளது.
இந்தியாவிற்கு வெளியே இருந்து அழைப்பவர்கள், +91 8062779200 என்ற எண்ணில் அழைக்கலாம்.
அத்துடன், உடன் தகவல்கள் கிடைக்கும் போது ஏர் இந்தியாவின் X தளத்திலும் (https://x.com/airindia) http://airindia.com என்ற இணையதளத்திலும் புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்படும்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri
