சட்டத்தரணிகள் சங்கம் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள அகிம்சா
சட்டமா அதிபரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுரா பி.மெத்தேகொடவுக்கு எழுதிய கடிதத்தில், தனது அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம்
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கவும், நடப்பு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு மறைமுக அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக, அகிம்சா விக்ரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது தந்தையின் வழக்கில், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவரது அலுவலகத்தின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறி, போராடுவதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் முடிவு பாசாங்குத்தனத்தால் நிறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam