சட்டத்தரணிகள் சங்கம் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள அகிம்சா
சட்டமா அதிபரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்வது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க, அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுரா பி.மெத்தேகொடவுக்கு எழுதிய கடிதத்தில், தனது அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம்
குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இலங்கை குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையைப் பாதுகாக்கவும், நடப்பு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து, சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதிக்கு மறைமுக அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக, அகிம்சா விக்ரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தனது தந்தையின் வழக்கில், சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவரது அலுவலகத்தின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறி, போராடுவதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் முடிவு பாசாங்குத்தனத்தால் நிறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
