இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் பௌத்த தேரர்கள்! ஆட்சி கவிழ்ப்பிற்குத் திட்டம்?
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூரணமாகவுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கப் பெரிதும் பாடுபட்ட பிரதான பௌத்த தேரர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.
தங்களது அதிருப்தி நிலையை அவர்கள் பகிரங்க ஊடக சந்திப்புக்களிலும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோட்டா-மஹிந்த அரசாங்கத்தை எதிர்த்து மாற்று வழியொன்றை உருவாக்குவது பற்றி கொழும்பில் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஓமல்பே சோபித்த தேரர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பௌத்த தேரர்கள் தவிர, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல அமைச்சுப் பதவியை வகித்து வந்த முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்ததோடு தற்போதைய அரசாங்கத்திலுள்ள ஒருசிலரும் பங்கேற்றியிருப்பதாகவே கூறப்படுகின்றது.
விசேடமாக புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து மக்களை அந்தக்கட்சிக்காக வழிநடத்துவதற்கு முதலாவது சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டதாக அபயராமய விகாரையின் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை, முருந்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஓமல்பே சோபித்த தேரர் ஆகியோர் முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்திருந்தனர். பிரதமராகவே முன்வந்து இந்த சந்திப்பினை ஒழுங்கு செய்திருந்த அதேவேளை, இதில் அரசாங்கத்தின் மீதுள்ள பல்வேறு குறைபாடுகளை தேரர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
இருப்பினும் அவற்றை அரச தலைவரை சந்தித்து முறையிடும்படியே பிரதமர் ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை மக்களை ஆத்திரப்படுத்தும் அளவுக்கு இன்றைய கோட்டா-மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் செயற்படுவதாக அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றுவதற்குப் பெரிதும் பாடுபட்ட கொழும்பு நாரஹேன்பிடி அபயராமய விகாரையின் விகாராதிபதியான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவிக்கின்றார்.
இந்த செய்தி தொடர்பான விரிவான விபரங்களை தாங்கி வருகின்றது The ReporThe Report விசேட தொகுப்பு,