வரலாறு படைத்த தமிழ்நாட்டு தேர்தல்..! இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் அதிரடி உத்தரவு..
"தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். வேட்பாளர்களாக நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள். பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
தமிழக வெற்றிக் கழகம்
தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியை தவிர ஏனைய 233 தொகுதிகளிலும் களம் கண்டது.
இந்தநிலையில், த.வெ.க. வேட்பாளர்களை இன்று(30) சென்னை வருமாறு, அக்கட்சியின் தலைவர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார்.

வரும்போது, வாக்குப்பதிவு நாளில் தேர்தல் அலுவலர் வழங்கிய 17 சி படிவத்தையும் எடுத்து வருமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த பனையூர் அலுவலகத்தில் இன்று மதியம் த.வெ.க. வேட்பாளர்களை கட்சியின் தலைவர் விஜய் சந்தித்து பேசினார். அப்போது, "தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். வேட்பாளர்களாக நீங்கள் வெற்றி பெற்ற உடன் வேறு எங்கும் சென்று விடாதீர்கள்.
பனையூர் அலுவலகத்திற்கு வந்துவிடுங்கள். உங்களுக்காக நான் காத்திருப்பேன். இதுவரை நன்றாக பணிபுரிந்துள்ளீர்கள். வாக்கு எண்ணிக்கை நாளில் கவனமாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.