இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி முயற்சி!
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் எஸ்.அமரசேகரவை சந்தித்தபோது சிரில் ரமபோசா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.அமரசேகர தனது நியமன கடிதங்களை ஜனாதிபதி சிரில் ரமபோசாவிடம் பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்து வழங்கினார்.
கடுமையான COVID-19 சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய இந்த நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமன் கடிதங்களை ஏற்றுக்கொண்ட பின்னர், ஜனாதிபதி ராமபோசா இலங்கைக்கான தனது வருகைகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி இருதரப்பு உறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
மற்றவர்களை அடக்கியாளவே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... இவங்ககிட்ட வம்பு வச்சிக்காதீங்க! Manithan