இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி முயற்சி!
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் எஸ்.அமரசேகரவை சந்தித்தபோது சிரில் ரமபோசா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.அமரசேகர தனது நியமன கடிதங்களை ஜனாதிபதி சிரில் ரமபோசாவிடம் பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்து வழங்கினார்.
கடுமையான COVID-19 சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய இந்த நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமன் கடிதங்களை ஏற்றுக்கொண்ட பின்னர், ஜனாதிபதி ராமபோசா இலங்கைக்கான தனது வருகைகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி இருதரப்பு உறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri