இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி முயற்சி!
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் எஸ்.அமரசேகரவை சந்தித்தபோது சிரில் ரமபோசா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.அமரசேகர தனது நியமன கடிதங்களை ஜனாதிபதி சிரில் ரமபோசாவிடம் பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்து வழங்கினார்.
கடுமையான COVID-19 சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய இந்த நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமன் கடிதங்களை ஏற்றுக்கொண்ட பின்னர், ஜனாதிபதி ராமபோசா இலங்கைக்கான தனது வருகைகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி இருதரப்பு உறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri