இலங்கையுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி முயற்சி!
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கையுடனான இருதரப்பு உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் எஸ்.அமரசேகரவை சந்தித்தபோது சிரில் ரமபோசா இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
எஸ்.அமரசேகர தனது நியமன கடிதங்களை ஜனாதிபதி சிரில் ரமபோசாவிடம் பிரிட்டோரியாவில் உள்ள செஃபாகோ எம் மக்காத்தோ ஜனாதிபதி விருந்தினர் மாளிகையில் வைத்து வழங்கினார்.
கடுமையான COVID-19 சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய இந்த நிகழ்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமன் கடிதங்களை ஏற்றுக்கொண்ட பின்னர், ஜனாதிபதி ராமபோசா இலங்கைக்கான தனது வருகைகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், இரு நாடுகளின் சுற்றுலாத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி இருதரப்பு உறவை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam