வெண் ஈயின் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள தென்னைப் பயிர்ச்செய்கை
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை, தண்ணீரூற்று,முறிப்பு, முல்லைத்தீவ,வற்றாப்பளை, உடுப்புக்குளம், அளம்பில்,செம்மலை,சிலாவத்தை போன்ற பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஈ தாக்கத்தினால் தென்னைமரங்களின் ஓலைகள் கறுப்பாகியதுடன் சில இடங்களில் கருகிய நிலையும் காணப்படுகின்றது இதனால் தெங்கு செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பாரியளவிலான தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இவ்வாறான பாரிய தோட்டங்களை வைத்திருக்கும் இடமாக அளம்பில் செம்மலைப்பகுதிகள் காணப்படுகின்றன.
அளம்பில் பகுதியில் உள்ள மாதிரி தென்னை செய்கையாளரான பெர்ணான்டோ அலைக்சிஸ் அமலதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் தென்னைக்கு கீழ் காணப்படும் விவசாய மரங்களும் இந்த வெண் ஈ தாக்கத்திற்கு உள்ளாகி கரு நிறத்திற்கு மாறியுள்ளன.
வெண் ஈயின் தாக்கம்
வெண் ஈயின் தாக்த்தினால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும் என்றும்தெரிவித்த ஒரு தெங்கு செய்கையாளர் இதனை தடுப்பதற்காக தான் பல்வேறு முயற்சி செய்துள்ளதாகவும் பெர்ணான்டோ அலைக்சில் அமலதாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்காக தான் ஒரோ நேரத்தில் தென்னை மரங்களின் கீழ் உள்ள ஓலைகளை அடியில் போட்டு எரித்து பார்த்துள்ளார் அத்துடன் சலவைத்தூள் கரைசலை பாரிய பம்மூலம் தென்னை மரங்களுக்கு விசிறிபார்துள்ளார் இவை அனைத்திற்கும் கட்டுப்பட்டாதக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போர்காலத்தில் போரினால் அழிவடைந்த தென்னைகளை மீள வைத்து பாதுகாத்து பராமரித்து நல்ல பலனினை அடைந்துவரும் நிலையில் இந்த நோய்தாக்கம் ஆனது தென்னைமரங்களின் இலைகளின் பச்சையத்தினை இல்லாமல் செய்து தென்னை மரங்களை இறக்கச்செய்யும் நிலைதான் ஏற்படும்.
மேலும், தென்னை ஓலை மினுக்கல் தன்மையுடன் காணப்பட்டு பின்னர் கறுப்பு கலராக மாறுகின்றது இதன்போது பாணி மாதிரி ஒட்டுகின்றது இந்த வெண் ஈ தென்னை ஓலையின் கீழ் பக்கத்தில் காணப்படுகின்றது.
இதனை கட்டுப்படுத்த சரியான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்று தெங்கு செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
செய்தி - கீதன்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் 'வெண் ஈ யின்' தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெண் ஈ யின் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாக தெரிய வருகின்றது.
இலைகளின் பின்புறம் இச் சிறிய ஒரு சோடி இறக்கை கொண்ட கொசு அளவில் உள்ள ஈக்கள் வாரம் 100 முட்டையிட்டு தென்னை ஓலையின் பச்சயத்தை சாப்பிடுவதால் ஓலைகள் காய்ந்து கொக்கு,காகம் எச்சம் பட்டது போல வெண்மையாக காணப்படுகின்றது.
இதன் எச்சங்கள் நாவல்,கருப்பு நிறமாக தென்னையின் கீழுள்ள மரங்களின் இலைகளில் விழுவதனால் அவை முதலில் கரும்புள்ளியாக மாறி பின்பு பூஞ்சன நோயின் தாக்கத்தினால் மண்ணிறமாக காய்ந்து காணப்படும்.
சிலர் வெண்ணிற ஈக்களின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஓலைகளை முழுமையாக வெட்டி எரித்து விடுகின்றனர். ஆனால் ஒரு பாலையும் ஓலையும் ஒரு மாதத்தில் உருவாகிறது. தென்னை காய்ப்பதற்கு குறைந்தது 10-15 ஓலைகள் அவசியம் எனவே ஓலைகளை வெட்டுவது பெரும் பாதிப்பையும் நட்டத்தையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக தென்னை மரங்களில் அதிகம் பரவியிருந்த வெண் ஈக்கள் தற்போது அனைத்து வகையான தாவரங்களிலும் பரவியுள்ளதோடு அதிகளவு இனப்பெருக்கத்தையும் மேற்கொள்கின்றது.
எனவே வெண் ஈக்களின் பரவல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு ஓய்வு பெற்ற விவசாய சிரேஷ்ட அதிகாரி பீற்றர் சிங்கிலயர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஈக்கள் வாகனங்கள்,மற்றும் மனிதர்கள் மூலம் பரவக்கூடியது.
எனவே அரசாங்கம் இந்த நோய் தாக்கத்தை சாதாரண ஒன்றாக கடந்து செல்லாது தேசிய அனர்த்தமாக கருதி கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி - ஆஷிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |