இலங்கைக்கான அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா அறிவுறுத்தல்!
இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கிய போதிலும், இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராகவும் பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.
புதன் கிழமை முதல் (நேற்று முன்தினம்) அமுலுக்கு வரும் வகையில் இலங்கை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு ஆபத்தான நாடுகளின் பட்டியலுக்கு (Amber List) மாற்றப்பட்டது.
எவ்வாறாயினும், கோவிட் -19 அபாயங்களின் தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கைக்கு அத்தியாவசிய பயணத்தைத் தவிர ஏனைய அனைத்திற்கும் எதிராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் அலுவலகம் பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சமூகத்தில் கோவிட் வழக்குகள் அதிகமாக இருப்பதால், குறுகிய அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளில் அதிக மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்கம் விதிக்கப்படலாம், மேலும் குறுகிய கால அறிவிப்பில் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம்.
இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி இடம்பெறலாம் எனவும், வெளிநாட்டினர் பார்வையிடும் இடங்கள் உட்பட பகுதிகளில் தாக்குதல்கள் இருக்கலாம்” என்று பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam