மும்பையில் வீழ்ந்த பாரிய விளம்பர பலகை: 14 பேர் பலி
இந்தியாவின் (India) நிதித் தலைநகரான மும்பையில் (Mumbai) இடியுடன் கூடிய மழையினால் பாரிய விளம்பர பலகை கோபுரம் ஒன்று வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததோடு 75 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
அத்துடன், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விளம்பர பலகையை அமைத்த விளம்பர நிறுவனம், அதனை காட்சிப்படுத்துவதற்கு மும்பை நகராட்சி அமைப்பிடம் அனுமதிப்பெற்றிருக்கவில்லை என்று மாநகராட்சி தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விளம்பரப்பலகையின் அளவு
சுமார் 100 அடி உயரம் கொண்ட இந்த விளம்பரப்பலகை, 1,338 சதுர மீட்டர் (14,400 சதுர அடி) அளவைக் கொண்டிருந்தது.
இது ஒலிம்பிக் குளத்தின் 1,250 சதுர மீட்டரை விட பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாநகர சபையினால் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட விளம்பர பலகையின் அளவை விட ஒன்பது மடங்கு அதிகமாக இது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
