பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்
2025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுளள்ன.
அதன்படி, பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள்
இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகின.

குறித்த விண்ணப்பங்களை பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அதன் மென் பிரதியினை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகத் தரவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு 176,527 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
புதிய பட்டப்பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை
இதேவேளை, இம்முறை 2025/2026 கல்வியாண்டிற்காக இரண்டு புதிய பட்டப்பாடநெறிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ருஹுணு பல்கலைக்கழகத்தில் 'புவியியல் தகவல் அமைப்பு' (Geographic Information Systems) பாடநெறிக்காக 50 மாணவர்களும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 'இலத்திரனியல் மற்றும் புத்திசார் அமைப்பு பொறியியல்' (Electronic and Intelligent Systems Engineering) பாடநெறிக்காக 50 மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281,810 ஆகும். அவர்களில் 176,538 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அந்த மாணவர்களில், இம்முறை அரச பல்கலைக்கழகங்களுக்கு 42,937 மாணவர்களை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், முதற்பட்டப் பாடநெறிகளுக்காக இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை இம்முறை அதிகரிக்காவிட்டாலும், மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி, பயனுள்ள மற்றும் தரமான கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏளனமாகப் பார்த்தார்கள், குழந்தைகள் தான் வெற்றிக்கு காரணம்.. நடிகர் விஜய் தேர்தல் வெற்றிக்கு பின் முதல் அறிக்கை Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam