யாழ்.உடுப்பிட்டி மதுபானசாலை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - உடுப்பிட்டி மதுபானசாலை தொடர்பான வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த மதுபானசாலையை அகற்றக் கோரி பிரதேச மக்களால் தொடரப்பட்ட வழக்கு இன்றைய தினம் (29) பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி எம் .ஏ. சுமந்திரன் குறித்த வழக்கில் முன்னிலையாகியிருந்த நிலையில் எதிர்வரும் (06/03/2025) க்கு தவணையிடப்பட்டுள்ளது.
வழக்கு
இதேவேளை, பருத்தித்துறையில் மரக்கறி வியாபாரிகளால் சந்தையை புதிய இடத்திற்கு மாற்றுவதை எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வழக்கு தொடருனர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகியிருந்தார்.
குறித்த மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் (31/01/2025) அன்று தவணையிடப்பட்டிருந்த நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று இடம்பெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
