கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு: வெளியான அறிவிப்பு
கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒத்திவைப்பு நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (27.06.2023) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகளே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (30.06.2023) காலை 9.30 மணிக்குச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறும் நோக்கில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
