மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி மோசடி வழக்கு 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நிரந்தர நீதிபதிகள் கொண்ட விசேட தீர்ப்பாயத்தில் இன்று(04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மோசடி
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன், அவரது மருமகனும் பெர்பசுவல் ட்ரஷரீஸ் உரியைமாளருமான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஈ.டி.ஐ பினான்ஸ் உள்ளிட்ட பத்து பேர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
ஒத்திவைப்பு
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை காணப்பட்டமையால் இந்த வழக்கு எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.