13இற்கும் மேலதிகமாக தமிழருக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: பௌத்த பிக்குகள் வலியுறுத்து
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
தென்பகுதியிலுள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமதக் குழுவினர் இன்று (07.02.2023) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களைச்
சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்த பிக்குகள் உட்பட சர்வமதத் தலைவர்கள், 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
13ஆவது திருத்தம்
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்குகள் 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய 13ஆம் திருத்தத்திற்கு மேலன அதிகார பகிர்வுக்கு செல்ல வேண்டும் என பௌத்தப்பிக்குகள் தெரிவித்துள்ளதாக யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
