சஜித்தின் மேடையில் ஏறிய நடிகை தமிதா அபேரத்ன
போஷாக்கின்மை காரணமாக இலங்கையின் சிறார்கள் பாரதூரமான பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்து கல்லூரிக்கு பேருந்தை அன்பளிப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர்

கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு பேருந்து ஒன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரான நடிகை தமிதா அபேரத்னவும் கலந்துக்கொண்டார்.
அரசாங்கத்தில் இணையுமாறு விடுத்த கோரிக்கை நிராகரித்தேன்

இதனிடையே போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற எந்த அணியுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அரசாங்கத்தில் இணையுமாறு விடுத்த அழைப்பை நிராகரித்ததாகவும் தமிதா அபேரத்ன அண்மையில் கூறியிருந்தார்.
அரசாங்கத்தில் இணைந்தால், பெருந்தொகை பணத்தை வழங்குவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam