வவுனியாவில் பைசர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை
வவுனியா 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசியாக பைசர் வழங்க சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 5 நிலையங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பைசர் தடுப்பூசி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த தடுப்பூசியினை கனகராஜன்குளம் வைத்தியசாலையில் 08ம் திகதியும், புளியங்குளம் வைத்தியசாலையில் 09ம் திகதியும், நைனாமடு பொதுநோக்கு மண்டபத்தில் 10ம் திகதியும், நெடுங்கேணி வைத்தியசாலையில் 13ம் திகதியும், காட்டுகுளம் பொதுநோக்கு மண்டபத்தில் 14ம் திகதியும் பெற்றுக்கொள்ள முடியும்.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்திருப்பின் தமது தடுப்பூசி அட்டையுடன் சென்று மூன்றாவதாக பைசர் தடுப்பூசியை பெற்று கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 13 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri