உருத்திரபுரம் நீவில் பகுதியில் மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் நீவில் பகுதியில் வயல்களில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வைப் பார்வையிடுவதற்காகவும், உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதற்காகவும் நீவில் கமக்கார அமைப்பினர், இராணுவத்தினர், பொலிஸார் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டிருந்தனர்.
நீவில் பகுதி வயல் நிலங்களில் பாரிய குழிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை மேற்படி தரப்பினர் இன்று நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து கிளிநொச்சி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி விவசாயிகளோடு கலந்துரையாடினார்.
குறித்த மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தமது விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன் போது விவசாயிகளிடம் கருத்து தெரிவித்த பொலீஸ் பொறுப்பதிகாரி, தனக்கு
மேலுள்ள உயரதிகாரியுடன் கலந்துரையாடிக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை
எடுப்பதாகவும் மணல் அகழ்வு தொடர்பான தகவல்களை தனக்கு அவ்வப்போது
தெரிவிக்குமாறும் தனது தொலைபேசி இலக்கத்தையும் வழங்கியுள்ளார்.




