ரஷ்ய படைகளை கட்டுப்படுத்த கூகிள் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்துள்ள போரினை நிறுத்த பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய படைகள் கூகுள் மேப் சேவை பயன்படுத்தாமல் இருப்பதற்காக அதனை நிறுத்தியுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐந்தாவது நாளாகவும் தொடரும் மோதலில், உக்ரேனில் ஏராளமான இராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்து ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய படைகள் கூகுள் மேப் உதவியுடன் வழிதடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரேன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்ய தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஓரளவு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.