நாடளாவிய ரீதியில் அரிசி ஆலைகளுக்கு மேற்கொள்ளப்படும் அதிரடி சுற்றிவளைப்பு!
அரிசி ஆலைகளுக்கு சுற்றிவளைப்பு
நாடளாவிய ரீதியில் சட்ட விரோதமாக கூடிய விலையில் அரிசி விற்பனை செய்யும் ஆலைகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை
இவ்வாறு அம்பாறையில் அரிசி ஆலைகளுக்கு சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிறு அன்று அரிசி ஆலைகள் தொடர்பான முறைப்பாடுகள் காரணமாகவே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட தலைமை அதிகாரி சாலிந்த நவரத்ன பண்டார தலைமையிலேயே இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 2 ம் திகதி வெளியிடப்பட்ட அதி விஷேட வர்த்தமானியில் கட்டளை இலக்கம் 82 ல் சிவப்பு/வெள்ளை நாடு வேக வைத்த உள்நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோவுக்கு 220 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு குறிக்கப்பட்ட விலையினை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட நபர்களையே சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி தண்டப்பணம் விதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர்
நிந்தவூர் பிரதேச எல்லைக்குள் அரிசி ஆலை ஒன்றிற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் இதன் போது அவ் ஆலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ் வழக்கானது கடந்த வெள்ளிக்கிழமை(17) சம்மாந்துறை நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அச் சந்தேக நபருக்கு சுமார் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகின்றது.
சந்தேக நபருக்கு 2021ம் ஆண்டின் 20ம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திருத்த சட்டத்தின் படியே இந்த தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022