சுதந்திர தினம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது இடையூறு விளைவிப்பதை தவிர்ப்பதற்காக நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாட்டில் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (04.02.2023) கொழும்பில் நடத்தப்படவிருந்த போராட்டம் தொடர்பிலேயே நீதிமன்ற இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுழைவு தடுப்பு உத்தரவு
இதன்படி, 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நாளை (04.02.2023) எந்தப் போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனவும், காலி முகத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam