யாழில் சட்டவிரோத முறையில் புகையிலை சார் பொருட்களை விற்றவருக்கு எதிராக நடவடிக்கை
யாழ். தெல்லிப்பளையில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கடம்பரூபனால் மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தண்டம் விதிக்கப்பட்டதுடன் குறித்த வர்த்தகர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
புகைத்தல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படும் இந்த வாரத்தில் புகையிலை சார் பொருட்கள் தொடர்பான தொடர் சோதனைகளில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பரா நந்தகுமார் தலைமையில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
விதிக்கப்பட்டுள்ள தண்டம்
இதன்போது, தொடர் எச்சரிக்கைகளை மீறி 21வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை விற்பனை செய்வோர் மற்றும் 80% சுகாதார எச்சரிக்கை இன்றி தனித்தனியாக சிகரெட் பீடி, சுருட்டு, புகையிலை துண்டு விற்பனை செய்யும் சில வர்த்தக நிறுவனங்களிற்கு நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, ஒரு வர்த்தக நிலையத்திற்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு சிலவற்றுக்கு விசாரணைக்குரிய திகதியிடப்பட்டுள்ளது.
அதேநேரம், பல வர்த்தக நிறுவனங்கள் சமூகத்தின் நன்மை கருதி புற்றுநோயின் கொடுமைகளை யாரும் அனுபவிக்கக்கூடாது என்ற சிந்தையோடும் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இளையோர் புகையிலைசார் பொருட்களுக்கு அடிமையாகி கல்வியையும், இளமைக்கால வாழ்வையும் தொலைக்கும் அவலத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விருப்போடும் புகையிலைசார் பொருட்களின் விற்பனையை தெல்லிப்பளையில் முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
