தமிழர் பகுதியில் இளைஞர் மீது பொலிஸ் அதிகாரி தாக்குதல் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஏறாவூரில் இளைஞரை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழர் பகுதியான மட்டக்களப்பின், ஏறாவூர் பகுதியில் இளைஞரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி நேற்றைய தினம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை. சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ்நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தால் ஏ.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இலஞ்சம் கோருதல், பாலியல் இலஞ்சம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த நபரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
தமிழர் பகுதியில் பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் - வெளியான காணொளி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள்! வெற்றி பெறுவாரா ரணில்.. 9 மணி நேரம் முன்

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்! சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கை குழந்தையுடன் வந்த ஆச்சரியம் Manithan

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யாவுக்கு நடந்த வளைகாப்பு! மகிழ்ச்சியில் குடும்பத்தார் News Lankasri

ஆதார் அட்டையுடன் தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக இலங்கையர் கைது: பொலிஸார் விசாரணை News Lankasri
