முல்லைத்தீவில் ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர்கள் கறுப்புபட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதோடு, ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (08) காலை 8.00 தொடக்கம் 8.25 வரை பாடசாலை வாயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம்
முன்னதாக முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி பாடசாலை ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளும், தங்கியிருந்த வீடும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
எனவே குறித்த விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை கைது செய்யுமாறும், ஆசிரியருக்கு நியாயமான தீர்வினை வழங்க வேண்டும் எனவும், தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்து பாடசாலை ஆசிரியர்கள் கையில் கறுப்புபட்டி அணிந்து கல்விக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
