பேராதனை பல்கலையில் நிதி மோசடி: அம்பலப்படுத்திய கணக்காய்வாளர் நாயகம்
உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்பலப்படுத்தியுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றிய பேராசிரியையின் பணமே இவ்வாறு மோசடியால் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணக்காய்வாளர் நாயகம் பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தை கோப் குழுவின் முன் அழைத்தபோது குறித்த மோசடி தெரியவந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
கோப் குழு வலியுறுத்தல்
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் போலி ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடி எனத் தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இது தொடர்பில் இதுவரையில் ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என கோப் குழு வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
