தமிழ் மக்கள் விடயங்களில் நீதியுடன் செயற்படுங்கள்! ஸ்ரீதரன் கோரிக்கை(Video)
தமிழ் மக்கள் விடயங்களில் நீதியுடன் செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு போன்ற வறுமையில் முன்னிலையிலுள்ள மாவட்டங்களை அபிவிருத்தியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது நாட்டில் பலர் முன்வைக்கும் விடயமாகும்.
ஆனால் அதற்கு மாறாக அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதியை எவருக்கும் தெரியாமல் இரகசியமாக வேறு மாவட்டங்களுக்கு மாற்றிக்கொள்வது என்பது முல்லைத்தீவு மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும் என கூறியுள்ளார்.
இது தொடர்பான எஸ்.ஸ்ரீதரனின் முழுமையான உரையை இந்த காணொளியில் காணலாம்,