இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவும் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அனுமதி
ஊடகத் தரநிலைகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, முன்மொழியப்பட்ட தேசிய அமைப்பான இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டத்தை வரைவதற்கு, அமைச்சரவை கொள்கை ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த திட்டம், இலங்கையின் ஊடக சமூகத்தினது தரத்தை மேம்படுத்தி, ஊடக அறிவுசார் நிபுணர்களை நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமைச்சரவை கொள்கை ஒப்புதல்
அதேநேரத்தில் பட்டய தொழில்முறை ஊடகவியலாளர்களை உருவாக்குகிறது. திறமையான, பட்டய தொழில்முறை ஊடகவியலாளர்களை உருவாக்குதல் மற்றும் நாட்டில் ஊடகத் துறையின் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஊடக பயிற்சியாளர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் அங்கீகார அமைப்பாக இந்த நிறுவனம் செயற்படவுள்ளது.
இந்த யோசனையை வரைவதற்கான ஆரம்ப ஒப்புதல், 2022 ஆகஸ்ட் 15, அன்று வழங்கப்பட்டது.
எனினும், தற்போதைய சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அண்மைய முன்மொழிவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான வரைவை முடிக்க அமைச்சரவையிடமிருந்து புதுப்பிக்கப்பட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளது.

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
