மாவட்ட நீதிமன்ற தீர்ப்புகளை பாதுகாக்க காணி பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும்! சுரேந்திரன் குருசுவாமி
வட மாகாணத்திற்கு உரித்தான மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை உதாசீனம் செய்யாது பாதுகாக்க மாகாணத்திற்குரிய காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என ரெலோ அமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திண்ணை விருந்தினர் விடுதியில் நேற்றைய தினம் (02.04.2023) 13 திருத்தத்தின் சாதக பாதங்கள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13 திருத்தத்தின் சாதக பாதங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், ''வட மாகாண மக்களின் பூர்வீக நிலங்கள் தொல்லியல் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டு வருகின்றது .
மேலும், முல்லைத்தீவில் மாவட்ட நீதிமன்றம் விகாரையின் கட்டுமானங்கள் நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையிலும் மத்திய அரசாங்கத்தின் பொலிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உதாசீனம் செய்து விகாரை அமைத்தமை அனைவருக்கும் தெரியும்.
13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக நாம் ஏற்கவில்லை சிலர் அரசியல் நீதியில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்காக பதின் மூன்றை ஏற்றுவிட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர்.
தமிழ் மக்களுடைய குறைந்த பட்ச இருப்பு அதிகார பாதுகாப்பு
தமிழ் மக்களுடைய குறைந்த பட்ச இருப்புக்களையும் அதிகாரங்களையும் பாதுகாப்பதற்காக 13 ஆவது திருத்தம் அவசியம்.
வடக்கில் தொல்லியல் திணைக்களம் தமிழ் மக்களின் காணிகளை வரலாற்று இடங்கள் என்ற போர்வையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றன.
அதனை தடுப்பதற்கு மாவட்ட நீதிமன்றங்கள் தீர்ப்புக்களை வழங்கினாலும் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாணப் பொலிஸ் இல்லாத நிலையில் மத்திய பொலிஸ் உயர் அதிகார வர்க்கங்களின் உத்தரவில் தீர்ப்புக்களை உதாசீனம் செய்யப்படுகிறது.
ஆகவே அரசியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மாகாண பொலிஸ் மற்றும் காணி
அதிகாரங்களை தமிழ் மக்களுக்கு வழங்கும் போது மாவட்ட நீதிமன்றங்களின் சுயாதீனம்
பாதுகாக்கப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்விடங்களும் பாதுகாக்கப்படும்" என
அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
