கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
கிளிநொச்சி - கனகபுரம் வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அருளானந்தம் மைக்கல் எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
செல்வாநகர் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது எதிரே வந்த கப் ரக வாகனமொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி வீதிக்கு வெளியே வாகனத்தைச் செலுத்தி வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார் பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் மற்றும் , கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சாரதி மீது போக்குவரத்து விதி கோவை சட்டத்தின் பிரகாரம் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri