கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் விபத்து! மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு-குருநாகல் பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நாரம்மலை, மினுவாங்கொடை ஊடான வழித்தட இலக்கம் 05, கொழும்பு-குருநாகல் பிரதான வீதியின் நால்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
ட்ரக் வண்டியொன்றும், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தற்போதைக்கு தம்பதெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறுமியொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றவர்களில் பேருந்து சாரதி, ட்ரக் வண்டி சாரதி ஆகியோரும் உள்ளடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri
