வவுனியாவில் கோர விபத்து: சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழப்பு
வவுனியா - ஓமந்தையில் இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை பகுதியில் இன்று மாலை சம்பவித்த குறித்த விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரான அகிலேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனமும் கப் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.
அதிதீவிர சிகிச்சை
குறித்த விபத்தில் வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இரவு 7.00மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - திலீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |