திருகோணமலையில் இடம்பெற்ற கோரவிபத்து - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும், டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(18) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
விபத்தில் 43,38 மற்றும் 26 வயதுடைய இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் காயமடைந்துள்ளனர்.
அக்போபுர, ஹித்துல்ஊற்று பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், முச்சக்கரவண்டி கார் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வேகமாகச் சென்ற டிப்பர் வாகனம் மோதுண்டதாக தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 17 மணி நேரம் முன்

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri
