வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து: வெளிநாட்டவர் படுகாயம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் இன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ரஷ்யா நாட்டு பிரஜையான பி.பி.ஏ.ஏ தமித்திரி (வயது-28) படுகாயமடைந்த நிலையில்,திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.