சம்பூரில் விபத்து: ஐவர் படுகாயம்
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள தங்கபுரம் பகுதியில்இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் ஐவர் படுகாயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) மாலை இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த மூவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலமும் இருவர் முச்சக்கர வண்டியிலும் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஐவர் படுகாயம்
இந்த விபத்தில் தங்கநகரைச் சேர்ந்த 38,18,09 வயதுகளைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் மீது 35, 48 வயதுகளைச் சேர்ந்தவர்கள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அதில் பயணித்தவர்கள் மது அருந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்தோடு விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து உடைவடைந்த நிலையில் மதுபான போதல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan