முல்லைத்தீவில் வாகன விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (11.01.2024) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து, பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.
அதே திசையில், பயணித்த டிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ள நிலையில், சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் அசமந்த போக்கு
குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்துள்ளனர்.
இந்நிலையில், மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள்
எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri