கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி - பூநகரி வாடியடி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (11-04-2024)இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
பூநகரி பகுதியில், கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் பூநகரி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தின் போது பூனகரி பள்ளிக்குடா பூனகரியை சேர்ந்த இராஜலிங்கம் சங்கீதன் ( வயது 36 ) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam