யாழில் இடம்பெற்றுள்ள விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
யாழ். பலாலி வீதி ஊடாக யாழ். வேம்படி மற்றும் யாழ். மத்திய கல்லூரி ஆரம்ப பாடசாலையினை இணைக்கும் முச்சந்தியில் மினி ரகமோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன வேக கட்டுப்பாட்டினை இழந்து அருகில் உள்ள மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணிக்கூட்டுக் கோபுரம் பின்பாக உள்ள வீதி மற்றும் பலாலி வீதியிலிருந்து
வேம்படிக்கு அருகில் உள்ள வீதியினை கடக்க முற்பட்டபோதே இவ்விபத்து
இடம்பெற்றுள்ளது.