சிலாபம் வீதியில் கோரவிபத்து! - உடல் கருகி உயிரிழந்த நபர்
ஆனமடுவ - சிலாபம் வீதியில் சங்கட்டிக்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி தீப்பிடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ முதலக்குளிய பகுதியைச் சேர்ந்த 60 வயதான ராஜகருணா ஹேரத் முதியன்சேலாகே ரன்பண்டார என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வன்னி ரஸ்நாயக்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே விபத்தில் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்தில் சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் ஸ்தலத்திலேயே தீப்பற்றி எரிந்தது.
இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் துரதிஷ்டவசமாக மோட்டார் சைக்கிளில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும், திடீர் தீயினால் அவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
You May Like This Video..


விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri