நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..! விசாரணையை தீவிரப்படுத்தும் பொலிஸார்
பொகவந்தலாவ பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற வாடகை கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று(16.05.2026) நோர்வூட் நியொலிகம பகுதியில் உள்ள ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி பயங்கரம் தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்குச் சென்ற இரகசிய கடிதம்! நடமாடும் காலத்தின் சாட்சியம்..
வீதியை விட்டு விலகி விபத்து
வேகமாகச் சென்றுகொண்டிருந்த வாடகைக் கார், சறுக்கிச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக் கம்பத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காருக்குள் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நிலவும் மோசமான வானிலை காரணமாக, பிரதான வீதிகளில் சாரதிகள் எச்சரிக்கையுடன் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை கட்டுப்பாட்டுடனும் இயக்க வேண்டும் என நோர்வூட் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.