கிளிநொச்சியில் விபத்திற்கு இலக்கான நபரொருவர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னராசா பிரதீபன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாகனத்துடன் மோதி படுகாயம்
குறித்த நபரும், அவரது நண்பரும் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது 54ஆம் கட்டையடியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்துடன் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக 22ஆம் திகதி அதிகாலை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி 22ஆம் திகதி மாலை உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |