வீதியில் தூங்கிய நபர் விபத்தில் பலி
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (17.06.2025) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்த நபர், வீதியில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் இதன்போது வாகனம் ஒன்று இளைஞன் மீது மோதிச் சென்றதால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பி ஓட்டம்
இளைஞன் மீது வாகனத்தை ஏற்றிய நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் வீதி ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை கண்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை இளைஞனுடன் தூங்கிய மற்றுமொரு இளைஞன் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
