ஜெர்மனியில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் பரவல்:வெளியான தகவல்
ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 934 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 38 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளதுடன்,ஒரே நாளில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 98 ஆயிரத்து 194 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றிலிருந்து 44.77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 4.62 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கோவிட் வைரஸ் பெருந்தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri