ஜெர்மனியில் மீண்டும் வேகமெடுக்கும் கோவிட் பரவல்:வெளியான தகவல்
ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 28 ஆயிரத்து 934 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 38 ஆயிரத்து 322 ஆக அதிகரித்துள்ளதுடன்,ஒரே நாளில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை 98 ஆயிரத்து 194 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கோவிட் தொற்றிலிருந்து 44.77 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 4.62 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கோவிட் வைரஸ் பெருந்தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri