யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி தலைமறைவான நபர் பொலிஸாரால் கைது
யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான நபரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் குறித்த நபரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல்நாள் தாலியை தருவதாக உறுதியளித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது திருமணத்திற்கு முதல்நாள் தாலியை வாங்க சென்ற போது, சந்தேகநபரின் கடை மூடப்பட்டிருந்ததுடன் தொலைபேசியும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து மணமகன் வீட்டார், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் சந்தேகநபர் கைது
செய்யப்பட்டுள்ளார்.

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri
