சட்டவிரோதமாக படகு மூலம் ஐரோப்பா செல்ல முற்பட்ட 50 இலங்கையர்கள் கைது
சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ- கொலிஞ்சாடிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் மற்றும் வான் ஒன்றில் பயணித்த போதே இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் நான்கு குழந்தைகளும் அடங்குவதுடன் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பெருமளவிலானோர் வெளிநாடு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு செல்ல முற்பட்டவர்கள் 900 பேர் வரையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.