நாட்டில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை.. கடுமையாக சாடிய ஞானசார தேரர்
இலங்கையில் பத்து ஆண்டுகளில் 890,000 கருக்கலைப்புகள் நடந்துள்ளன அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளன என்று பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நடந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்," கடந்த காலங்களிலிருந்து குறித்த விடயம் தொடர்பில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருகிறேன்.
கடந்த காலங்களில், இரண்டு அரசு சாரா நிறுவனங்கள், மாரிஸ்டெப் Marie Stopes International மற்றும் பிஎஸ்எல், அரசின் ஆதரவுடன் குடும்ப சுகாதார அதிகாரிகள் மீது அழுத்தம் கொடுத்துப் பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றன.
பொய் கருத்துக்கள்..
இதை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். நாங்கள் இந்த விடயங்களை வெளிப்படுத்திய போது, பொய் சொல்கிறோம் என்று நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள்.
அவற்றைப் பரிசோதனை ரீதியாக நிரூபிக்க வேண்டும். இவற்றை எமது கருத்தாக மாற்றி சிலர் அரசியல் செய்தனர். பிறப்பு வீதம் குறைந்துள்ளதால் கிராமத்துக்கு குடும்ப சுகாதார அதிகாரி தேவையில்லை என நளிந்த ஜெயதிஸ்ஸ நாடாளுமன்றில் கூறியபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.
அரசாங்கம் இதைச் செய்யக்கூடாது. பொய்களால் இன்று ஒரு நாடு பின்னோக்கி நகர்கிறது. பொய் கூறுபவர்கள் செய்ய முடியாத பாவம் எதுவும் இல்லை. பொய்யர் ஒரு வெற்றுப் பாத்திரம் போன்றவர்.
பொய்யர் ஒரு வெற்று மனிதன். நாடாளுமன்றத்தில் பேசப்படுவது உண்மை என்று நான் பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் இவை ஹன்சார்டுகளில் பதியப்படுவதால்.. ஆனால் அப்படி ஒன்றும் நடப்பதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




