வெள்ளை வானில் வந்தவர்கள் சிறுவனை கடத்த முயற்சி
பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரந்தாய் பகுதியில் நேற்று மாலை சிறுவனொருவரை கடத்தி செல்வதற்கு முற்பட்டுள்ளனர்.
கரந்தாய் பகுதியில் தாயுடன் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த சிறுவனை சிலர் கடத்தி செல்வதற்கு முயன்றுள்ளனர்.
கறுப்பு துணியால் முகத்தை மூடி வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத சிலரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தாய் சிறுவனை காப்பாற்றியுள்ளார். சம்பவத்தை பார்த்து வீதியால் சென்றவர்கள் அப்பகுதியில் திரண்ட போது குறித்த வாகனம் தப்பி சென்றுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
May you like this video