கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் விசேட திட்டம்
தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர் அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் துறை பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு விசேட திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த இரண்டு அல்லது மூன்று பருவங்களில், நாங்கள் விவசாய சங்கங்களை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பணத்தை வழங்குவோம். நமது விவசாயிகள் மிகுந்த கடனில் உள்ளனர்.
அவர்கள் வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடம் கடன்பட்டுள்ளனர், அதனால் அவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது தங்கள் நெல்லை விற்கவோ முடியவில்லை. அவர்கள் வட்டிக்குக் கடன் வாங்குவதால் உற்பத்திச் செலவு அதிகரிக்கிறது.

எனவே, நாங்கள் ஒரு வங்கியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் உற்பத்திச் செலவை வழங்குவோம். நாங்கள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒவ்வொரு விவசாய நிறுவனத்திலும் ஒரு வேளாண்மை உதவி மையத்தை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம்.
உலகின் மிகவும் மேம்பட்ட இயந்திரங்கள், பெரிய டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், ட்ரோன்கள், களை எடுக்கும் மற்றும் கட்டும் இயந்திரங்களை நாங்கள் கொண்டு வருவோம்.
அந்த நிறுவனங்கள் மூலம், விவசாயிகளின் தேவைகளை மலிவு விலையில் பூர்த்தி செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம். நாங்கள் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறோம். விவசாயிகள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்காகவே நாங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வந்தோம் என்றார்.
கொழும்பில் விடுதலைப் புலிகள் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் - அநுர அரசின் விசாரணையில் அம்பலமான உண்மை