ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வழங்கிய கிரிக்கெட் வீரர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்து இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதனைகள்

அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரோன் பிஞ்ச் செயற்பட்டு வருகின்றார்.
35 வயதாகும் ஆரோன் பிஞ்ச், இதுவரையில் 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதேவேளை 17 சதங்கள் மற்றும் 30 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 5401 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
எப்போது அணியிலிருந்து விலகுகின்றார்...?

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (11) இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சில முன்னணி வீரர்கள் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆரோன் பிஞ்ச்சின் இந்த அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam