ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வழங்கிய கிரிக்கெட் வீரர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்து இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதனைகள்

அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவராக ஆரோன் பிஞ்ச் செயற்பட்டு வருகின்றார்.
35 வயதாகும் ஆரோன் பிஞ்ச், இதுவரையில் 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதேவேளை 17 சதங்கள் மற்றும் 30 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 5401 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
எப்போது அணியிலிருந்து விலகுகின்றார்...?

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை (11) இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆரோன் பிஞ்ச் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக சில முன்னணி வீரர்கள் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆரோன் பிஞ்ச்சின் இந்த அறிவிப்பானது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 6 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam