30 வருடங்களாக அவதிப்படும் இளைஞனின் சோகக் கதை
உள்நாட்டு போர் நிறைவுற்று வருடங்கள் பல கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது. உலகம் எவ்வளவோ முன்னேறினாலும், வறுமை மாறாமல் தொடர்கின்றது.
அவை கொக்குவில் ,யாழ்ப்பாணம் பகுதியில் வாழும் ஜெகநாதன் வசந்தகுமார் குடும்பத்தினருக்கும் துன்பத்தை தவிர வேறெதுவும் வாழ்க்கையில் இருந்ததாக அவர்களுக்கு ஞாபகம் இல்லை.
உதவிக்கு யாருமின்றி வறுமையோடும்,பிணியோடும் அடுத்த வேளை உணவுக்காக இன்னுமொருவரை எதிர்பார்த்து தமது வாழ்க்கையை கண்ணீருக்கு மத்தியில் கொண்டு செல்வதாக தமது துயரத்தை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளியின் ஊடாக பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
இப்படி வறுமையில் வாழும் இவர்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து இன்னும் சொல்லப்படாதவை ஏராளம். ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri