கேப்பாப்புலவு கிராமத்தில் களமாடி காலை இழந்த விஜிதாவின் சோகக் கதை
உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாமல் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம்.
இந்த நிலையில் ஆண் துணையில்லாது குடும்பத்தை கொண்டு செல்லும் ஒரு பெண் படும் துயரத்தை நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு கிராமத்தில் வாழும் முன்னாள் போராளியான குமார் விஜிதா களமாடி காலை இழந்த போராளியாவார்.
ஆரம்பம் முதல் இன்று வரை வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.
இருந்தும் நாட்டிற்கு ஓர் சட்டத்தரணியை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கும் தாயின் கதையை சுமந்து வருகின்றது இன்றைய என் இனமே என் சனமே நிகழ்ச்சி,